மிதித்தாலும் மதித்தாலும்
உதித்த உயிர்க்கெல்லாம்
உணவளிக்கும் உன்னதமே!
உயிரோடு இருக்கும் வரை
அயராதுரைத்திடலாம் நின் பெருமை
தன்டக்கம் காட்டிடும் நீ
அனைத்தையும் உன்னிலடக்கிடுவாய்!
இறந்தவர் தான் கீழிருப்போர்
மறந்தவர் தான் தரம் பிரிப்பர்
வரம் பெற்றோர் யார் இங்கே
உரம் தானே மரித்த பின்னே
சிரம் மீது தாங்கி எம்மை
கரம் தந்து காத்திடுவாய்
மந்திரங்கள் செய்பவரும்
தந்திரமாய் ஆழ்பவரும்
எந்தப் போரில் வென்றவரும்
வந்தடைந்தே வீழந்திடனும்
உன்னடியில்-
அந்தரத்தில் வாழ்பவரும்!...
---------------நிலம்---------------
உதித்த உயிர்க்கெல்லாம்
உணவளிக்கும் உன்னதமே!
உயிரோடு இருக்கும் வரை
அயராதுரைத்திடலாம் நின் பெருமை
தன்டக்கம் காட்டிடும் நீ
அனைத்தையும் உன்னிலடக்கிடுவாய்!
இறந்தவர் தான் கீழிருப்போர்
மறந்தவர் தான் தரம் பிரிப்பர்
வரம் பெற்றோர் யார் இங்கே
உரம் தானே மரித்த பின்னே
சிரம் மீது தாங்கி எம்மை
கரம் தந்து காத்திடுவாய்
மந்திரங்கள் செய்பவரும்
தந்திரமாய் ஆழ்பவரும்
எந்தப் போரில் வென்றவரும்
வந்தடைந்தே வீழந்திடனும்
உன்னடியில்-
அந்தரத்தில் வாழ்பவரும்!...
---------------நிலம்---------------