காலம் உரைந்து போக
கடவுளிடம் வரம் கேட்பேன்
காரணம் தேவையெனின்
சீராய் எடுத்துரைப்பேன்
உயிர் தந்த
உயிரிரண்டும்
உயிர் நீங்கும்
துயர் தாங்கும்
வலிமையில்லை
உயிராய் பலகிய உறவுகள்
வாழ்க்கை ஓட்டத்தில்
தொலைவு செல்ல
விலைவுகளை விரும்பியேற்று
மறந்து வாழ
மனம் ஏற்கவில்லை
சிறு பிள்ளையாய்
குறும்புகள் பல நிகழ்த்திப் பின்
இளமை தொடங்கியதும்
எண்ணற்ற தேவைகளுக்காய்
புன்னகையை தொலைத்து
மண்ணில் அலைய விருப்பமில்லை
இன்ப நினைவுகள் ஏந்தி உள்ளம்
இனி இது நிகழ்ந்திடுமா
என்றெண்ணி
வருந்தும் வாழ்வில் அர்த்தமில்லை
முகம் சுருங்கி
முடி உதிர்ந்து
முதுமை ஆட்கொள்ள
அரிய வாழ்வை உயிர் பிரிந்து
மண்ணில் புதைந்து போக
மனம் இணங்கவில்லை
---மாற்றம் வேண்டாம்---

No comments:
Post a Comment