கண்ணில் தென்படா காதலியே
உன்னை சுவாசிக்கிறேன்,
உன்னால் நானும் உயிர் வாழ்கிறேன்,
உன் தீண்டலில் மெய் சிலிர்க்கிறேன்-நீ
தீண்டுவதனால்தான் உயிர்துளிர்க்கிறேன்,
மழைக்காலத்தில் உன் ஈரத்தழுவல்களில்
விழுந்ததுண்டு அதிகம் நான் விரதங்களில்
உன்னைக் காணும் முயற்சியில் தோல்வியுற்றால் - எத்தனை பிறவிகளும் பிறக்கத் துடிப்பேன் இப்பூமியில் - இன்னும்
என்ன சொல்ல கவியில்,
உலவும் உன்போல் அதிசயம்
உண்டோ புவியில்......
-----காற்றின் காதலன்-----
No comments:
Post a Comment