தாய்மை கொள்ளும் பெரு மகிழ்ச்சி!
உணவைக் காணும் வரை
பசித்தவனுக்கு ஏது மகிழ்ச்சி?
பூத்த புது மலர் கண்டால்
மனதுக்குள் பெரு மகிழ்ச்சி!
கேட்ட பொருள் கிடைக்கும் வரை
மழலைக்கு ஏது மகிழ்ச்சி?
வலை நிறைய மீனிருந்தால்
மீனவனுக்கு பெரு மகிழ்ச்சி!
மழையின்றி நிலம் வறண்டால்
உழவனுக்கு ஏது மகிழ்ச்சி?
சிலை வடிக்கக் கல் கிடைத்தால்
சிற்பிக்கு பெரு மகிழ்ச்சி!
உழைப்புக்கேற்ற ஊதியம் இன்றி
உழைப்போருக்கு ஏது மகிழ்ச்சி?
காகிதமும் பேனையும் கண்டால்
கவிஞனுக்கு பெரு மகிழ்ச்சி!
அமைதியான புவியிருந்தால்
உயிர்கள் காணும்
நிறைவான நிஜ மகிழ்ச்சி!
--எது மகிழ்ச்சி--

சிறப்பு
ReplyDeleteமகிழ்ச்சி
ReplyDelete